தமிழகம்

கருவைக் கலைத்துவிடு.. காசு தாரோம்.. ஜிம் ஓனரின் தாய் டீல்.. பெண் விபரீத முடிவு!

தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர், தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். அப்போது, ஜிம் உரிமையாளரான பத்மகுமரன், அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், பத்மகுமரனுக்கு புதிய ஜிம் தொடங்க அந்தப் பெண் ரூ.38 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, இந்தப் பணத்தை வைத்து செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றையும் பத்மகுமரன் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே, அந்த பெண்ணுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், இந்த விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணுடன் பேசுவதை பத்மகுமரன் நிறுத்தியுள்ளார். எனவே, இது குறித்து பத்மகுமரனின் தாயாரிடம் பேசியுள்ளார்.

அதற்கு அவர், “கருவைக் கலைத்துவிடு. என் மகன் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறோம்” எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பத்மகுமரன் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பெண்ணிடம் வாங்கிய ரூ.38 லட்சம் பணத்தை பத்மகுமரன் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

மேலும், பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் பத்மகுமரன் அளித்த உறுதியின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, சுவாமிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார்.

பின்னர், அங்கு வந்த அப்பெண்ணிடம், கர்ப்பத்தைக் கலைத்து விடு, இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பத்மகுமரனைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.