தமிழகம்

கஸ்தூரிக்கு 2 தனிப்படை.. இசைவாணிக்கு இல்லாதது ஏன்? எச்.ராஜா ஆவேசம்!

கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்த தமிழக காவல்துறை, இசைவாணி மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.26) நடைபெற்றது. இதில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, வந்திருந்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜகவின் உட்கட்சித் தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது, அது 30ஆம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 1 முதல் நகர், ஒன்றிய கமிட்டிகளுக்கான தேர்தல் நடக்கும். டிசம்பர் 16 முதல் 30 வரை மாவட்டத் தலைவர் உள்ளிட்ட கமிட்டிக்கான தேர்தல் நடக்கும்.

ஜனவரி முதல் வாரத்தில் மாநிலத் தேர்தல், ஜனவரி 15ஆம் தேதிக்குள் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தை பிறக்கும் போது பாஜகவின் தேசியத் தலைவர் கமிட்டி வரும். அதற்கான பயிலரங்கங்கள் தான் இங்கு நடந்திருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அரசு இதுவரை வெள்ளம் என்றால் சென்னை மட்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மாதம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

ஆகவே, எல்லா மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, அரசு மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக் கொள்கிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் இந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விஷயமாகும், அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐயப்பனைப் பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, பிறவி இந்து விரோதி ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பல பேர் என்னிடம் ஐயப்பனைப் பற்றி பேசினால், நான் ஏசப்பனை பற்றி பேசுவேன் என்கிறார்கள். தப்பு, நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் நீ எந்த ஆண்டவனை வணங்கினாலும், அது நாராயணனை போய்ச் சேரும்.

வழிபாடு வேறுபாட்டை, வேறுபாடு என்று கருதாத ஒரு கலாச்சாரத்தை கெடுப்பதற்கு, மத மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள், இதற்கு பின்னால் கிருஸ்துவ மத தலைவர்கள் இருக்க மாட்டார்கள், கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள். அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை?

காவல்துறையே இந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான இந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களைப் பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும்.

எது அரசியல் தர்மம் என்றால், பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு நீதி வேண்டும் என்கின்ற அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இன்றைய அரசு அப்படியா இருக்கிறது? இதுவரை மகாராஷ்டிராவில் 200 தொகுதிகளுக்கு மேல் எந்த கட்சியும் வெற்றி பெற்றது இல்லை.

ஆனால், இன்று 288க்கு 233 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி மகாயுதி எனும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டணிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தமிழக பாஜக சார்பில் எங்களுக்கு சத்ரபதி சிவாஜி வேண்டும், ஒளரெங்கசீப் ஆட்சி இல்லை என தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.

ஏனென்றால், முஸ்லீம் தலைவர்கள் 14 கோரிக்கைகள் வைத்தார்கள், அதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. ஆனால், மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். மாநில பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வங்கதேசத்தில் அரசாங்கம் மின்சாரத்திற்கு காசு கொடுக்கவில்லை, அதனால் இவர்கள் மின்சாரத்திற்கான பில்லை கொடுக்கவில்லை என அமெரிக்கா நிர்பந்தப்படுத்தியும், அதானி தயாராக இல்லை.

நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு பணம் கேட்டார், கொடுக்காததால் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை நிறுத்தியதால், இது போன்ற ரிப்போர்ட் வந்திக்கு. அதானிக்கு எதிராக அமெரிக்கா கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் அதானி இந்த சூரிய மின்சாரத்தை ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பது புகார்.

இதையும் படிங்க: விஜய் அரசியலில் ஹீரோவா இருக்கனும்னா இதச் செய்யனும்.. பார்த்திபன் ஓபன் டாக்!

இதில் தமிழ்நாடு முதலிடம், அடுத்து ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா. இதில் பாஜக ஆளும் மாநிலம் இருக்கிறதா என்றால், இல்லை. இதில் தமிழகமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மாநிலங்களில் பாஜக இல்லை. அதனால் பாஜகவிற்கு எந்த பங்களிப்பும் இல்லை.

அமெரிக்க கோர்ட் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டவர் அதானி, பாஜகவை சம்மந்தப்படுத்தி, பிரதமர் வாயைத் திறக்கவில்லை என்பது தேவையற்றது. அதானி மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.