தமிழகம்

விஜய்க்கு ஒரு கேள்வி.. கடுப்பான எச்.ராஜா!

விஜயின் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளிலா படிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய பட்ஜெட் 2025 விளக்க பொதுக் கூட்டம், சுந்தரபுரம் சங்கம் வீதியில் நடைபெற்றது. இதற்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும், இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.வசந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “மத்திய பட்ஜெட்டில் வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இருந்த பயிர்க்கடனை, ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழிப் பிரச்னையை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் தூக்கி பேசிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்று பேசுவதற்கு தமிழக முதலமைச்சருக்கு வெட்கம் இருக்காதா? இந்தி உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தி சொல்லித் தரக்கூடாது. முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு முடியவில்லை என்றால், எதற்கக அமைச்சராக இருக்க வேண்டும்? நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், ஆனால், ஏன் அரசுப் பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது? ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது.

கேரளா சென்ற முதலமைச்சர், ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதேபோல், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்தப் பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த குப்பைக் கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இறங்க மறுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஏப்ரல் முதல் கோவை மாநகராட்சிக்கு இப்பகுதி மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா? மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள்.

இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள், நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளியில் சேருங்கள். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு தடையில்லை. விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு உள்ளனர். அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சிப் பள்ளியில் படிக்க வையுங்கள்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

18 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.