தமிழகம்

விஜய்க்கு ஒரு கேள்வி.. கடுப்பான எச்.ராஜா!

விஜயின் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளிலா படிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய பட்ஜெட் 2025 விளக்க பொதுக் கூட்டம், சுந்தரபுரம் சங்கம் வீதியில் நடைபெற்றது. இதற்கு, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும், இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.வசந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “மத்திய பட்ஜெட்டில் வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இருந்த பயிர்க்கடனை, ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழிப் பிரச்னையை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் தூக்கி பேசிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்று பேசுவதற்கு தமிழக முதலமைச்சருக்கு வெட்கம் இருக்காதா? இந்தி உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தி சொல்லித் தரக்கூடாது. முதலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு முடியவில்லை என்றால், எதற்கக அமைச்சராக இருக்க வேண்டும்? நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம், ஆனால், ஏன் அரசுப் பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது? ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் உள்ளது.

கேரளா சென்ற முதலமைச்சர், ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதேபோல், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்தப் பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த குப்பைக் கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இறங்க மறுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஏப்ரல் முதல் கோவை மாநகராட்சிக்கு இப்பகுதி மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா? மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள்.

இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள், நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளியில் சேருங்கள். எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு தடையில்லை. விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு உள்ளனர். அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சிப் பள்ளியில் படிக்க வையுங்கள்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

6 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

7 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

7 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

7 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

7 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

8 hours ago

This website uses cookies.