தமிழகம்

தவெக மாநாட்டுக்குச் சென்ற நபர் மாயம் – கோர்ட்டில் போலீசார் திடுக்கிடும் தகவல்!

தவெக மாநாட்டுக்குச் சென்ற தனது மகனை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு எனது மகன் மேகநாதன் சென்றார்.

ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. எனவே, மாயமான எனது மகனை கண்டுபிடித்துக் கொடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.10) விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “மாயமான மனுதாரரின் மகனை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

அது மட்டுமல்லாமல், இந்த விசாரணை தொடர்பான நிலை அறிக்கையையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!

முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (TVK Maanaadu) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமர் 8 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.