Categories: தமிழகம்

ரயில் பயணத்தின் போது ராணுவ வீரரிடம் கைவரிசை : ஒரு மாதம் கழித்து மீண்டும் திருட வந்த கொள்ளையன்… ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடிய இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக ரயில் நிலையத்திற்கு திருட வந்த போது கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த ராணுவ வீரரான சுகேஷ் கடந்த மாதம் 17-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஏ.சி பெட்டியில் சென்றார்.

ரயில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த போது சுகேஷ் தனது பையை எடுக்க முயன்றபோது பை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பை காணாமல் போனது குறித்து சுகேஷ் கோவை ரெயில்வே காவல்துறையில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் ராணுவ வீரரின் பையை திருடி செல்லும் காட்சி கள் பதிவாகி இருந்தன.

இதனை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் காவல்துறையினர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ராணுவ வீரரிடம் பையை திருடிய இளைஞர் ரயில் நிலையத்தில் நிற்பதை பார்த்தனர். சுதாரித்து கொண்ட காவல்துறையினர் அந்த இளைஞரை மடக்கி காவல் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த இளைஞர் கோழிகோட்டை சேர்ந்த ரத்திஷ் (வயது 38) என்பதும், அவர் மீது கேரள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கோவையில மீண்டும் திருட வந்த போது மாட்டி கொண்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் ராணுவ வீரரின் பையில் பொருட்கள் ஏதும் இல்லாததால் அதை வீசிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் ரத்தீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

ஆப்ரேஷன் சிந்தூர்  பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…

14 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்…25 நிமிடங்களில் பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா… என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…

27 minutes ago

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

17 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

17 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

18 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

18 hours ago

This website uses cookies.