ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ,வ.உ.சி நகர் பகுதி சேர்ந்தவர் அருண்(33) இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சலீமா பீ(31) இ வர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2ஆம் மாதம் சலீமா பீ வீட்டு வேலை செய்வதற்காக துபாய் சென்றுள்ளார் . தனது உறவினர் பெண் அங்கு உள்ள காரணத்தினால் ஏஜண்ட் மூலமாக துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு சலீமா பீ செல்போன் வாயிலாக அருணை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது பேசிய அவர் தான் தற்போது ஓமன் பகுதியில் உள்ளதாகவும் இங்கு தன்னை தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துவதாகவும் சிலர் தன்னை தாக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுந்த அருண் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் இது குறித்து தன் மனைவியை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சலீமா பி வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது கணவரான அருணுக்கு அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் தன்னால் பணியாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்த அவர் தன்னிடம் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துள்ளதாகவும் அசிங்கமாக பேசி அவமானப்படுத்துவதாகவும் அடித்து துன்புறுத்துவதாகவும் 2 லட்ச ரூபாய் தருமாறு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் உண்பதற்கு உணவு குடிக்க தண்ணீரும் கூட இல்லாத நிலையில் உள்ளதாகவும் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது தன்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார்
மேலும் படிக்க: சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு.. ராகுல் காந்திக்கு மீண்டும் சிக்கல்.. விரைவில் சம்மன்?!
அதன் அடிப்படையில் அருண்குமார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் மகனுடன் வந்து தன் மனைவியை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கினார் மேலும் தன் மனைவியை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.