தமிழகம்

ஹோட்டல் அறையில் உல்லாசம்.. வேலை முடிந்ததும் இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலன்!

ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவை சேர்ந்த தாசே கவுடாவுக்கு ஹரிணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன், ஹரிணி வசித்த பகுதியில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு டெக்னீஷியனாக பணிபுரிந்த யஷாஸ் என்பவருடன் அறிமுகமாகி, தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து நட்பாக பேசியுள்ளனர்.

இதையும் படியுங்க: தலையெடுத்து பார்க்க முடியாத அளவு திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : கவுதமி தடாலடி!

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஊர் சுற்றியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விஷயம் கணவர் தாசே கவுடாவுக்கு தெரியவர, மனைவியை எச்சரித்துள்ளார்.

மேலும் செல்போனை பிடுங்கி வீசிவிட்டு, மனைவியை வீட்டுச் சிறையில் வைத்தார். இதையடுத்து வெகு மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த ஹரிணி, தனது கள்ளக்காதலன் யஷாஸ்சை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இருவரும் கடந்த 6ஆம் தேதி மீண்டும் சந்தித்தனர். பின்னர் ங்களூரு பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்த யஷாஸ், ஹரிணியை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.

வெகுநேரமாக அறையில் இருந்து யாரும் வராததை கண்ட ஹோட்டல் ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறி வரவழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுப்பிரமணியபுரா போலீசார், சடலமாக கிடந்த ஹரிணி உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் யஷாஸை கைது செய்து விசாரித்ததில், ஹரிணி என்னை தவிர்த்ததால் கொலை செய்ததாக கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.