தேனி : அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இணைந்த என்னை கட்சியை விட்டு நீக்கம் அதிகாரம் யாருக்கும் இல்லை என ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா கூறியுள்ளார்.
நேற்று சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விடுவிப்பதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.ராஜா, நான் சசிகலாவை மனப்பூர்வமாக அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறேன். ஆகையால் நான் எம்ஜிஆர் காலத்தில் கட்சியில் இணைந்த என்னை நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ், இபிஎஸ்கு இல்லை.
என்னை கட்சியை விட்டு நீக்கம் செய்யும் அதிகாரம் சின்னம்மா ஒருவருக்கு மட்டும்தான் உள்ளது. இது சம்பந்தமாக சின்னம்மா அவர்களிடம் நாங்கள் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். நான் சின்னம்மாவை சந்தித்தது கழக உறுப்பினர் என்ற முறையில் சந்தித்தேன்.
ஓபிஎஸ் இடமும் ஈபிஎஸ் இடமும் நான் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒற்றைத் தலைமையில் சின்னம்மா தலைமையில் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம். தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் விருப்பமும் இதுதான்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.