திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (38). இவர் திருச்சி மாவட்டம், மாத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முதுகு வலி காரணமாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி வயலூர் சாலையில் உள்ள சீனிவாசநகர் பகுதியில் இயங்கி வரும் ஜெயரங்கா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆராய்ச்சி நிலையம் என்னும் தனியார் மருத்துவ மனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் ஒரு வார காலமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை அறைக்கு மருத்துவர் சென்று பார்த்தபோது பாலசுப்பிரமணியன் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் பாலசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்து விட்டனர் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினால் விடும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.