பிரபல நடிகை தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வருகிறார்.இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நுழைந்து, மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே போதுமானது என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரை ஒரு இயக்குனர் ஹீரோயினாக நடிப்பதற்கு உனக்கு தகுதி கிடையாது எனவும், துணை நடிகையாக நடிப்பதற்கு தான் உனக்கு தகுதி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இதனால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை அசிங்கப்படுத்திய இயக்குனர் முன்பு தான் ஒரு ஹீரோயினாக வரவேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுழல்தி வோர்டெக்ஸ் என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் படங்களில் நடிக்கும்போது தண்ணீர் கூட குடிக்க மாட்டாராம். ஏனெனில் அவர் பிரபலமான ஹீரோயினாக இல்லாத காரணத்தினால் அவருக்கு கேரவன் வழங்கப்படவில்லையாம். இவர் பண்ணையாரும் பத்மினியும் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போதுதான் கேரவன் வழங்கப்பட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.