Categories: தமிழகம்

டேய் எவன்டா துப்புனது ஒழுங்கா ஒத்துக்கோ.. எச்சில் துப்பியதால் பேருந்தை மறித்து ரகளை..!

வேடசந்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேருந்தில் சென்ற அடையாளம் தெரியாத பயணி பான் பராக் போட்டு எச்சில் துப்பியதால் பேருந்தை மறித்து ரகளை செய்த இளைஞர்களால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் – பழனியில் இருந்து கரூர் மார்க்கமாக பெங்களூர் நோக்கி சென்ற Royal Traves ஆம்னி பேருந்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது பான் பராக் போட்டு எச்சிலை துப்பியதாக கூறப்படுகிறது.

அந்த இளைஞர் தலையில் எச்சில் விழுந்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நண்பர்களோடு ஆத்து மேடு ஜங்ஷனில் பேருந்தை வழி மறித்தனர். பேருந்தை மறித்த இளைஞர்கள் யாருடா எச்சிலை துப்பியது மரியாதையாக இறங்கி வாங்க இல்லையென்றால், இந்த பேருந்து இங்கிருந்து நகராது என்று பேருந்தை மறித்து அரை மணி நேரமாக ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு விரைந்து வந்த போலீசார் என்னப்பா பிரச்சனை ஏன் பேருந்தை மறிக்கின்றீர்கள் என்று கேட்க சார் நான் பைக்ல வரும்போது என் மீது எச்சிலை துப்பிட்டாங்க யாருன்னு கேட்டா யாருமே கீழ வர மாட்றாங்க என்று அந்த இளைஞர் சொல்ல அங்கு வந்த போலீசார் பேருந்தில் ஏறி யாராவது எச்சில் துப்பி இருந்தா சொல்லிருங்க எனக் கேட்கயாருமே வாய் திறக்கவில்லை பேருந்திலிருந்த சில ஆண்களை வாயை காட்டுங்க என்று பார்த்தபோது எல்லா வாயுமே பான்பராக் போட்டது போல் இருந்ததால் யாராவது துப்பியிருந்தால் ஒத்துக்கோங்க மன்னிப்பு கேளுங்க என கூற யாருமே வாய் திறக்கவில்லை பின்பு அங்கிருந்த இளைஞர்களிடம் பேசி சமாதான படுத்திய போலீசார் பேருந்தை அனுப்பி வைத்தனர்.

மேலும் கடைசிவரை எச்சில் துப்பியவன் யார் என்று தெரியாமலே இளைஞர்கள் ஏமாற்றத்துடன் கலலைந்து சென்றனர். மேலும் பேருந்தில் பிரச்சினை நடக்கிறது என்று கூட கண்டுக்காமல் ஓட்டுநர் அமர்ந்து செல்போனில்ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடதக்கது. இச்சம்பவத்தால் வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

9 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

11 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

13 hours ago

This website uses cookies.