இயக்குநரும், திமுக ஆதரவாளருமான கரு பழனியப்பன், தனியார் யூடியூப் சேனலில் நடந்த யாவரும் கேளிர் நிகழ்ச்சியில் ஆணவக் கொலை, பெண்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது கரு பழனியப்பன், வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாப்படுகிறது என்பதை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.
அப்போது நெறியாளர் ஒருவர் கிண்டலாக அதை குறிப்பிட, அரங்கமே சிரிப்பொலியை கிளப்பியது. அப்போது கரு. பழனியப்பன், வரலட்சுமி விரதத்திற்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார்.
இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி, தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இவனும் நாளைக்கு சட்டமன்ற வேட்பாளரா வந்து நிப்பான்.. ஓட்டு போட்டு சட்டமன்றதிற்கு அனுப்பி விடுங்க.. ஏன்டா ஒரு பெண் சாந்தோம் சர்ச் பாதிரியாராக வர முடியுமானு பேசி சிரிங்க.. ஒரு பெண் ஜமாஅத் உள்ளே தொழுகை நடத்த முடியுமானு பேசி சிரிங்க.. வரலட்சுமி விரதம் பற்றி மட்டும் பேசி சிரிப்பது உள்நோக்க அரசியல் .. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.