தமிழகம்

தலை இல்லாமல் இரண்டு துண்டுகளாக கிடந்த ஆண் சடலம் : 24 வயசுதான்… விசாரணையில் ஷாக்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமம் உள்ளது, இப்பகுதி அருகே உள்ள கரட்டின் உச்சியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்தது.

இரு துண்டுகளாக கால்பகுதி மற்றும் உடல் பகுதியாக கிடப்பதாகவும் தலைப்பகுதி இல்லாமல் இருந்த நிலையில், அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமயிலான குழுவினர் கிராம நிரவாக அலுவலர் சோபனா தலைமையில் மலைக்கரட்டின் உச்சிப்பகுதிக்கு சென்று சிதைந்த உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அருகே உள்ள மரத்தில் தூக்கு கயறு இருந்தது.

கால்சட்டைப்பையில் வைத்திருந்த பணப்பையில் (மணி பர்ஸ்) நிரந்தர கணக்கு அட்டை ( பான் கார்டு) மற்றும் கனரா வங்கி ஏடிஎம் அட்டை ஆகியவற்றைக்ககொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேம்மாபட்டு மேற்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சம்பத்-24 என்பது தெரிவந்தது. மேலும் சக்திவேலுக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் சம்பத் பிடெக் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஶ்ரீபெரும்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

சகோதரர் ஶ்ரீதரன் ஶ்ரீபெரும்புத்தூர் காவல்நிலையத்தில் அண்ணணைக் காணவில்லை என்று இரண்டரை மாதங்களுக்கு முன்பு மே மாதம் 13-ம் தேதி புகார் ஒன்றை அளித்து தேடிவந்த நிலையில், சம்மந்தமே இல்லாம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு குக்கிராமத்தின் மலைக்கரட்டுப் பகுதியின் உச்சியில் அழுகி சிதைவுற்று தலையில்லாமல் இரு துண்டுகளாக பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரயில் பயணச்சீட்டு பையில் இருப்பதால் அருகில் உள்ள கொடைரோடு இரயில் நிலையத்திலிருந்து நடந்து வந்தாரா அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்தாரா இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த யாரும் வந்துள்ளனரா அல்லது வேறு யாரும் உடன் வந்தார்களா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு எப்படி வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலைக்கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.