Categories: தமிழகம்

தடுப்பூசி போடுவதால் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பலாம்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

விழுப்புரம் : ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் நோய் தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரனோ மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிகச்சைகள் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதார துறை செயலர் முன்னிலையில் கொரோனா தடுப்பு செலுத்தும் மையத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்

.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாகவும், வரக்கூடிய
இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போதும் கட்டாயம் அனைவரும் முகம்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது,சானிடைசர் போன்றவை பயன்படுத்துவது போன்றவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவிட் பாதிப்பில் அதிக நுரையீரல் தொற்றால் உயிரிழப்பு இருந்த நிலையில் மூன்றாவது அலையான உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பில் தடுப்பூசி செலுத்து கொள்வதால் நுரையீரல் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலையில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசி 89.68 சதவிகிதமும், இரண்டாவது தவனை தடுப்பூசியை 66.95 சதவிகிதம் பேர் போட்டுகொண்டுள்ளதாகவும், 98.3 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் உள்ளதால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் பலபேர் ஒரு சடங்குக்காகவே மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர் கொரனோ நோய் பாதிப்புக்குள்ளான  2 லட்சம் பேர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்று வருவதாகவும், திருமணங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய்த்தொற்றை குறைக்கலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.