இந்தியாவையே உலுக்கிய வயநாட்டு நிலச்சரிவு சம்பவத்தில் பல தன்னார்வ அமைப்புகள் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்
இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வண்ணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறர் நலன் நாடும் தன்னார்வல அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக சிறியவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உதவும் வண்ணம் ஆடைகள், அரிசி, பிஸ்கட், காய்கறிகள் மற்றும் போர்வை, துண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திரட்டி வருகின்றனர்.
மேலும் பேருந்தில் செல்லும் பயணிகளிடமும், சாலையில் நடந்து செல்லும் மக்களிடமும், பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்களிடமும் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் கையேந்தி நிவாரண பொருட்களை வழங்கிட கூறி நிதி திரட்டி வருகின்றனர்.
மேலும் திரட்டப்படும் பொருட்கள் மற்றும் நிதியை நாளை வயநாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் வழங்கி பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாக நிதி திரட்டி வரும் பிறர் நலன் நாடும் தன்னார்வல இளைஞர்கள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.