தமிழகம்

வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு!

வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணங்கள் வழங்கவும், வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, வெப்ப அலையால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்த அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூனில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் நிலவியது. வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது, ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது, வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.