சென்னையில் பாரத் இந்தி பிரசார சபாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சபாவின் சார்பில் ஆண்டுதோறும் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வகைகளில் 8 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இன்று இந்தி தேர்வுகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் ஏராளமானவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று இந்தி மொழி தேர்வை எழுதினர். திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியர் ஷபானாவும் இந்த தேர்வை எழுத வந்தார்.
ஷபானா ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது.
தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடம் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம் கூறியுள்ளனர். ஹிஜாப் அணிவதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.