மதுரை : திருமங்கலம் அருகே ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள் தலைமறைவான அரிசி ஆலை அதிபரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழக்கோட்டைக்கு கிராமத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்துள்ளதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் , ஆய்வு செய்த சிவராமன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்தார். அப்போது ரைஸ்மில் அதிபர் அங்கிருந்து தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உசிலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வந்தது தெரிய வந்ததையடுத்து, அதனையும் பறிமுதல் செய்து உணவு பொருள் தடுத்தல் பிரிவு துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மினி லாரி ஓட்டுநரும் லாரியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வட்டாட்சியர் காவல் துறையில் புகார் அளித்து வாகன ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.