ஈரோடு : சத்தியமங்கலம் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகள்.
சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நசீமா பேகத்துக்கு பிரசவவலி ஏற்பட்டது.
இதனால் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் எடை குறைந்து குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவர்களுடன் இருந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சல்மான்கான் மற்றும் மருத்துவ உதவியாளர் பரத் ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தாய் மற்றும் குழந்தையை பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருததுவமனையில் சேர்த்தனர்.
துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.