திருப்பூரில் மாநகராட்சி சார்பில், சாக்கடை கட்ட தோண்டப்பட்ட குழியின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கட்டுவதற்காக குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. சாக்கடை கட்ட தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலம் இழந்து காணப்பட்டது.
இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே சாக்கடை கட்ட தோண்டிய குழியின் இடைவெளியை கடக்க அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அபிராம் மரப்பலகையை போட முற்படும் போது, பலமிழந்திருந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.
இதனையடுத்து அருகிலிருந்தவரக்ள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.