தமிழகம்

அம்மா கூட பழகி வரும் அங்கிள் என் தம்பியை அடிச்சு சாகடிச்சிட்டாரு.. சாட்சியாக வந்த 9 வயது சிறுமி!

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேரு நகரில் வசிப்பவர் ஆனந்தன் தனம் தம்பதிகள். இவர்களுக்கு எட்டு வயதில் ஷோபனா என்ற மகளும் ஆறு வயதில் குகன் என்ற மகனும் உள்ளனர். குகன் ஒன்றாம் வகுப்பு சோபனா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளாக ஆனந்தனுக்கும் மனைவி தனத்துக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. தனம் தன்னுடைய பிள்ளைகளுடன் நேரு நகரில் வசித்துக்கொண்டு பரந்தூர் நிலை எடுப்பு அலுவலகத்தில் மசால்சி வேலை செய்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் ராஜேஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ராஜேஷ் செவிலிமேடு அருகே வசித்து வருகிறார். தனத்துக்கும் ராஜேஷுக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பெயரில் ராஜேஷ் அவ்வப்போது தனத்தின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனத்திடம் கூறிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் ராஜேஷ் அழைத்துக் கொண்டு செல்லும்போது தனத்தின் அம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகாதே எனத் தடுத்துள்ளார்.

அதற்கு தனம் பிள்ளைகளை அழைத்துப் போகட்டும் என ராஜேஷுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அதன் பெயரில் ராஜேஷ் தனத்தின் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செவிலி மேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று உள்ளார்.

இதையும் படியுங்க: ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!

விடியற்காலையில் தனத்துக்கு போன் செய்து குகனுக்கு உடல் நலம் சரியில்லை , மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றேன் என கூறிவிட்டு குகனை வாகனத்தில் வைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கே மருத்துவர்கள் குகனை பரிசோதித்து விட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்கள். மேலும் குழந்தையின் உடம்பில் ஆங்காங்கே ரத்த காயம் இருந்துள்ளதால் காவல்துறையினருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து குகனின் சடலத்தை கைப்பற்றிய தாலுக்கா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சங்கராமன் , பிரேத பரிசோதனைக்காக குகனின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜேஷ்சை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நேற்று மாலை குகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனத்தின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அருகே உள்ள தாயார் அம்மன் குளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

இது தொடர்பாக குகனின் அக்கா ஷோபனா காவல்துறையினரிடம் கூறியது, என்னுடைய தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்தார். மிதித்தார். தள்ளிவிட்டார்.

அதனால் என் தம்பி இறந்து விட்டான் என காவல்துறையிடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ராஜேஷின் வீட்டில் இருந்த குகனின் ரத்தக்கரை படிந்த துணிமணிகளை காவல்துறையினர் கைப்பற்றி , குகனின் சாவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதைப் பற்றி காவல்துறையிடம் கேட்டபோது, முழுமையான விசாரணைக்குப் பிறகு எப்ஐஆர் 302 செக்க்ஷனில் மாற்ற வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

அரசு அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்குள்ளே கள்ளக்காதல் மலர்ந்து , தொடர்ந்து, அதன் மூலம் ஆறு வயது சிறுவன் அநியாயமாக அடித்து கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

18 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

18 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

18 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

19 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

20 hours ago

This website uses cookies.