தமிழகம்

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண் நிகிதா காதலித்துள்ளார்.

அஜய் மற்றும் நிகிதா மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நிகிதா பெற்றோர் இவர்கள் காதலை ஏற்காததால், கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்த நிகிதா அஜய் உடன் வந்தார்.

இதற்கிடையே நிகிதா 6 மாதம் கருவுற்ற நிலையில் நிகிதாவின் காதலை ஏற்காத பெற்றோர் கருவுற்றதை ஏற்க முடியாமல் கருவை கலைத்து அஜய் மீது போலீசில் புகார் அளித்து போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ வழக்கில் அஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஜய் சிறையில் இருந்த நான்கு மாத காலத்தில் நிகிதா பலமுறை அவரைச் சந்தித்தார். இந்த விஷயம் வீட்டில் தெரியவந்ததால் ​​நிகிதாவின் பெற்றோர்களான சுஜாதா மற்றும் கிஷோர் துன்புறுத்தத் தொடங்கினர்.

இதையும் படியுங்க: நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

இந்த நிலையில் அஜய் போனுக்கு நிகிதா தன்னை வீட்டில் அடித்து துன்புறுத்துவதாக மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நிகிதா இறந்தார். நிகிதா இறந்தவிட்டதாக கூறி பெற்றோர் உடனுக்குடன் யாருக்கும் தெரியாமல் உடலை சில மணி நேரத்தில் எரித்து இறுதி சடங்கு செய்தனர்.

இந்த விஷயம் கிராம மக்களின் கவனத்திற்கு வந்ததும், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நிகிதாவின் பெற்றோர் சுஜாதா மற்றும் கிஷோர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிய விசாரணை நடந்து வருகின்றனர். இதுகுறித்து அஜய் கூறுகையில் நிகிதாவின் மரணம் பல சந்தேகங்கள் உள்ளது. நிகிதா என்னை வீட்டில் கொல்ல முயற்சிப்பதாகச் சொல்லி எனக்குச் மெசேஜ் அனுப்பினாள். அவளுடைய மரணம் குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

நிகிதாவின் பெற்றோர் அவளை பலமுறை அடித்ததாகவும், கௌரவத்திற்காக அவளை கொலையைச் செய்திருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நிகிதாவின் உடல் விரைவாக தகனம் செய்யப்பட்டது மற்றும் அவர் இறப்பதற்கு முன்பு அஜய்க்கு அனுப்பிய மெசேஜ் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு, போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

கிராமவாசிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், அஜய் அளித்த விவரங்களின் அடிப்படையிலும், இந்த சம்பவத்தில் கௌரவக் கொலை இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

இருப்பினும், ஒரு உறுதியான முடிவுக்கு வர போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதி மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் கௌரவக் கொலைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

நிகிதாவின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை போலீஸ் விசாரணை கண்டறிய வேண்டும் என பலர் கோரிக்கை கேட்டு கொண்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.