ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று மேயர் சத்யா தலைமையில், ஆணையாளர் சினேகா துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. மாமன்ற கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, ஓசூர் மாநகராட்சி 45ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் கலாவதி சந்திரன், தன்னுடைய வார்டு பகுதியில் தனக்கு தெரியாமல் அதிகாரிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வார்டு பகுதியில் உள்ள மக்கள் தன்னை கேள்வி கேட்கின்றனர் என அதிகாரிகளை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பினர்.
இந்த மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓசூர் மாநகராட்சி தளி சாலை பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், ஓசூர் மாநகராட்சி வளாகத்தில் திருவள்ளுவருக்கும் சிலைகளை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தை எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள், கலைஞர், திருவள்ளுவர் ஆகியோருக்கு சிலைகளை வைப்பது போல, ஓசூர் மாநகராட்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை வைக்க மேயரிடம் அனுமதி கேட்கிறோம், இது சம்பந்தமாக அவர் பேசட்டும் நீங்கள் பேசக்கூடாது என திமுக கவுன்சிலர்களை அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ், சங்கர், அசோகா ஆகியோர் தடுத்து பேசினர். நீண்ட நேரம் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் கூச்சல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
This website uses cookies.