தமிழகம்

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு.. ஒரே இரவில் டுவிஸ்ட்!!

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு(45), இவர் நேற்று இரவு ஓட்டலில் இருந்தபோது போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்

உணவு சாப்பிட்டு முடித்த பின்பு பணம் கொடுக்க மறுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு இளவரசுவை கத்தியால் வெட்டிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சாய்கனேஷ் வெட்டுக்காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் இளவரசுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார்(23), அவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(25), முத்து(30), என்பது தெரியவந்தது இவர்கள் மூன்று பேரும் செம்பரம்பாக்கம் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசாரை தப்பியோட முயன்றபோது பற்றி போலீசார் மடக்கி பிடித்ததில் மூன்று பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது சசிகுமார் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் நேற்று இரவு மூன்று பேரும் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றபோது நூம்பல் பகுதியில் நடந்து சென்ற வட மாநில வாலிபரை வெட்டி அவரிடம் செல்போனை பறித்துள்ளனர்.

அதேபோல் தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் சென்ற போது அம்பத்தூரில் வந்த நபரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் அம்பத்தூரில் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் சென்றவர்களை கத்தியால் வெட்டிவிட்டு வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே இரவில் மூன்றுக்கும் மேற்பட்டோரை வெட்டிவிட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்றபோது வழியில் கிடைத்தவர்களை எல்லாம் வெட்டி விட்டு வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களிடமிருந்து கத்தி, ஐந்து செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

LGBTQIA குறித்து சர்ச்சை கருத்து… வருத்தம் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்..!!

LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…

10 minutes ago

எங்களுக்காக ஒரு அணி உருவாக்கினார் விஜய்… தவெகவில் இணைந்த திருநங்கைகள் நெகிழ்ச்சி!

திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…

37 minutes ago

புதிய வரலாறு படைத்த இந்திய அணி… 2வது டெஸ்ட் போட்டியில் சாதனை!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…

1 hour ago

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

2 days ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

2 days ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

2 days ago

This website uses cookies.