தமிழகம்

இளம்பெண்ணுக்கு வீட்டுக்காவல்.. அடைத்து வைத்து சித்ரவதை: 100க்கு பறந்த போன் கால்!

கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.

இதையும் படியுங்க: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!

இருவரும் மேஜர் என்பதால் இருவரும் தங்கள் காதலை பெண்ணின் வீட்டில் வெளிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுத்து உள்ளார். இதனால் சூர்யாவை துடியலூர் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள உறவினர் சுப்ரமணியன் என்பரது வீட்டில் நான்கு நாட்களாக வீட்டில் சிறைபடுத்தி உள்ளதாக தெரியவந்து உள்ளது.

இந்நிலையில் வீட்டில் அடைபட்ட சூர்யாவின் மொபைல் போனை வாங்கி வைத்து விட்டு வெளி உலக தொடர்பின்றி வைத்து உள்ளதால் அவரை காதலித்து வந்த ஹரிஹரனுக்கு, சூர்யா உறவினரின் போனில் இருந்தே தகவல் கொடுத்து உள்ளார்.

இதனை அடுத்து காவல் துறையின் அவசர உதவி எண் 100 க்கு ஹரிஹரன் தகவல் கொடுத்து உள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறி ஹரிஹரனின் வழக்கறிஞர் பெண்ணின் வீடியோவை எடுத்து வெளியிட்ட பிறகு காவல் துறையினர் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்து, வீட்டில் சிறைவைக்கபப்ட்ட பெண் தரப்பினரையும் அப்பெண்ணின் காதலர் ஹரிஹரன் தரப்பினரையும் விசாரிக்க துடியலூர் காவல் நிலையம் அழைத்து செல்ல உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.