வாணியம்பாடி அருகே வீட்டின் சுற்று சுவரை இடித்து தள்ளி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம், முருக்கன் குட்டை வட்டம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரகாசம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருடைய விவசாய நிலத்திற்கு பின்புறம் செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோரின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாததால், காலம் காலமாக பிரகாசம் நிலத்தின் வழியாக வரப்பு பாதை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோர் தங்களின் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல பிரகாசமிடம் வரப்பு பாதைக்கு பதிலாக கார் செல்லும் அளவுக்கு பொது வழி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழி கொடுக்க பிரகாசம் மறுத்ததால் கார்த்தி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் உடன் 2 ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் கொண்டு வந்து பிரகாசம் வசித்து வந்த வீட்டின் சுற்று சுவர் இடித்து தரைமட்டம் செய்தும், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 2 பெண்கள் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரகாசம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் சுவர் இடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், பிரகாசம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுற்று சுவரை இடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.