திருவள்ளூர் : பொன்னேரி அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி 46 குடும்பங்களைச் சார்ந்த 136 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28. ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு முன்னிலையில் கடந்த 23ஆம் தேதி நிலங்களை மீட்டனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்த நிலையில் இன்று 46 குடும்பங்களைச் சேர்ந்த 110 வீடுகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொன்னேரி தச்சூர் சாலையில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வீசி எரிந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.