கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் முக்கிய நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்துவங்கி உள்ளது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடர் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள திரு.வி.க நகர் குடியிருப்புக்குள் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நீர் தேங்கியது.
இதன் காரணமாக வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், வெளியே சென்றவர்கள் குடியிருப்புக்குள் வர முடியாமலும் தவித்தனர்.
மேலும் படிக்க: ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!
இந்நிலையில் ஒரு சில வீடுகளில் மழை புகுந்தது. மேலும் அதிகாலையில் இருந்து அப்பகுதியில் மக்களே தூய்மை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் ஆலாந்துறை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.