கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் முக்கிய நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்துவங்கி உள்ளது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடர் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஆலந்துறை அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள திரு.வி.க நகர் குடியிருப்புக்குள் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நீர் தேங்கியது.
இதன் காரணமாக வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், வெளியே சென்றவர்கள் குடியிருப்புக்குள் வர முடியாமலும் தவித்தனர்.
மேலும் படிக்க: ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!
இந்நிலையில் ஒரு சில வீடுகளில் மழை புகுந்தது. மேலும் அதிகாலையில் இருந்து அப்பகுதியில் மக்களே தூய்மை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் ஆலாந்துறை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.