தமிழகம்

எங்களுக்கே தெரியாது.. திருச்சியில் 2 மணி நேர திக் திக்.. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது எப்படி?

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்து, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நார்த்தாமலை, அன்னவாசல், முக்கணமலைப்பட்டி, கீரனூர் மற்றும் அம்மாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் மேல் நீண்ட நேரம் விமானம் ஒன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் வட்டமடித்த விமானத்தின் சத்தத்தால் ஒட்டுமொத்த ஊரும் அன்னார்ந்து பார்க்கத் தொடங்கியது. என்ன ஆனது என பொதுமக்கள் சிந்திப்பதற்குள், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்ற செய்திகள் வெளி வந்துக் கொண்டிருந்தன.

ஆம், வெள்ளிக்கிழமை மாலை 05.40 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லக்கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீண்ட நேரம் வான்ல் வட்டமடித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும் என்பதே 141 பயணிகளை சுமந்து கொண்டிருக்கும் விமானத்தின் விமானி மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகளின் கண் முன் இருந்த சவால். இதில் மேலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், கூடுதல் தீயணைப்பு வண்டிகள் மற்றும் காவல் துறை படை திருச்சி விமான நிலையத்துக்குள் வந்தது.

ஆனால், “நீண்ட நேரமாக விமானம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தது போன்று தெரிந்தது. 4 வருடமாக விமான பயணத்தை மேற்கொண்டு வரும் எனக்கே ஒருவித பயம் ஏற்பட்டு விட்டது” என்றார், விமானத்தில் பயணித்த பயணி ஒருவர். ஆக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டதாக பயணிகள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அது மட்டுமல்லாமல், “விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு தான், அவசர நிலை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது” என அறிவித்தனர் என்றார் மற்றொரு பயணி.

எல்லாம் இருக்க, 141 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோரின் உயிரை திறம்பட காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இதனிடையே, திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரும் என்ன நடந்தது, நடக்கப் போகிறது என்ற தகவலையும் வழங்கினார். இதனிடையே, விமானத்தில் இருந்த பயணிகள் உடன் உறவினர்கள் பேசிய வீடியோக்களும் நெகிழ வைத்தது.

இந்த நிலையில், பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம் மற்றும் அவசர நிலை குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விமான இயக்கக் குழுவினரால் அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்திய ஏர் இந்தியா, தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு முன், ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு எரிபொருளையும், எடையையும் குறைக்கவே விமானம் வானத்தில் பலமுறை வட்டமிட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.