திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் எழில்மாறன். சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்
இந்நிலையில் எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதனை அடுத்து எழில் மாறன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பைக் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில்
எழில் மாறனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆள் வைத்து கணவனின் பைக்கை திருட வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னைப் பிரிந்து சென்ற கணவன் விலை உயர்ந்த புது பைக்கை வாங்கிக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்துக் கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி தனது உறவினர்கள் உதவியுடன் கணவனின் மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதனை அடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழில் மாறனின் மோட்டார் பைக்கை கைப்பற்றிய போலீசார் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பால யோகி, பிரகாஷ், காயத்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் தலைமறைவான எழில் மாறனின் மனைவி ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.
கணவனின் மோட்டார் சைக்கிளை மனைவியே திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.