பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? வாக்களித்த பின் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கருத்து!
மதுரையில் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் உடன் மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.
தொடர்ந்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்து பேசுகையில், 2 வது சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: விஜய் ரசிகருக்கு இப்படியொரு சோதனையா? TVK நிர்வாகியின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதால் பரபரப்பு!
இந்திய குடிமகன் என்கிற அடிப்படையில் வாக்களித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
400 இடங்களில் வெற்றி கிடைக்கும் என பாஜக கற்பனையில் உள்ளது.
இந்திய அளவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 220 இடங்களில் இருந்து 240 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவைகளில் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தமிழ்ப்பற்று, சுயமரியாதை, கல்வி உள்ளிட்டவைகள் அடங்கிய மாநிலத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என பேசினார்.
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
This website uses cookies.