சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னையின் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுமதி(37). இவர் தூய்மைப் பணியாளர் ஆவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் தி.நகர் பிரகாசம் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டார். ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே பெண் பணியாளர் வேண்டாம், ஆண் பணியாளர்தான் வேண்டும் என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
எனவே, சுமதி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுள்ளது. மேலும், பலமுறை கேட்டும் சுமதிக்கான நிலுவைச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த மார்ச் 4ஆம் தேதி மாலை, சம்பந்தப்பட்ட அலுவலக நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதனால் உடல் முழுவதும் பலத்த தீக் காயத்துடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்..!!
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மனிதவள மேலாண்மை மேலாளரான பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரீத்தி (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லி சென்றிருந்த அவரை அங்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.