Categories: தமிழகம்

மரித்து போன மனிதநேயம்… உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் பறிபோன உயிர் : கோவையில் நடந்த கொடூரம்!!

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டர், அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்து உள்ளார்.

9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்கத் துவங்கி உள்ளனர். சாரத்தில் சந்திரன் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார்.

நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின்,தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் , கவலைக்கிடமாக இருந்துள்ளார்.

உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, பயத்தில் நடுங்கியபடி நின்று உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை ஒரு மணி நேரம் ஆகியும், குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க வில்லை.

நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உள்ளனர். 108 ஆம்புலென்ஸில் வந்தவர்கள் சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்,டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை உடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும்.

கீழே விழுந்தவரை ஒரு மணி நேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபசரிப்பிற்கு பெயர் பெற்ற கோவையில், நடைபெற்ற இச்சம்பவம் மனிதம் மரித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

11 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

13 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

13 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

14 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

14 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

15 hours ago

This website uses cookies.