ராணிப்பேட்டையில் குடும்பத் தகராறில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர்கள் பாலாஜி – சித்ரா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாலாஜியின் நடத்தையில் சித்ராக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பாலாஜியிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சித்ரா, ராணிப்பேட்டை மாவட்டம், அய்யம்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகள் உடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.17) சித்ரா, தனது குழந்தைகளுக்காக வீட்டில் முறுக்கு சுட்டுக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது திடீரென பாலாஜி அங்கு வந்து உள்ளார்.
அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாலாஜி, தான் கொண்டு வந்த பெட்ரோலை சித்ரா மீது ஊற்றி உள்ளார். இதனால் அங்கு இருந்து தப்பிக்க சித்ரா முயற்சி செய்து உள்ளார். இருப்பினும், அவரால் முடியவில்லை.
பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் சித்ரா மீது நெருப்பை பற்ற வைத்து உள்ளார் பாலாஜி. அப்போது பாலாஜியை சித்ரா கட்டிப் பிடித்து உள்ளார். இதில் பாலாஜி மீதும் நெருப்பு பற்றி உள்ளது. இதில் அலறித் துடித்த சித்ரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!
அதேநேரம், இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 60 சதவீத காயங்கள் உடன் இருந்த பாலாஜியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.