சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 22-ம் தேதி, இருவரும் தனிமையில் இருந்தபோது, சிலர் ஜன்னல் வழியாக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்து, தங்கள் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் இடத்திற்கு ஒரு நபர் சென்று, தான் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகக் கூறி, புகார் வந்துள்ளதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் என்றும் கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றார்.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், அந்த நபர் தனது செல்போனில் உள்ள வீடியோவைக் காண்பித்து, “இதில் இருப்பவர் நீங்கள் தானே?” என கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், வீடியோ எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என வினவியபோது, அந்த நபர், “வீடியோவை யாரிடமும் பகிராமல் இருக்க, 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்” என மிரட்டியுள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த நகையைக் கேட்டபோது, அது கவரிங் எனத் தெரிவித்ததும், “நாளை 20,000 ரூபாய் பணம் கொண்டு வந்து, உங்கள் கணவருக்கு தெரியாமல் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவோம்” என மிரட்டியுள்ளார்.
இதனால் பதறிப்போன பெண், இந்த விவகாரத்தை தனது கணவரிடம் தெரிவித்து, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வைத்தியலிங்கத்தைச் சேர்ந்த கோகுல் சந்தோஷ் (21), முத்து பாண்டி (24), ஹரிஹரசுதன் (28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஹரிஹரசுதன் சித்த மருத்துவராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.