தமிழகம்

மனைவியுடன் உடலுறவு வைத்த முதலாளி.. ரகசிய வீடியோ எடுத்த தொழிலாளர்கள் : அலற விட்ட அந்தரங்கம்!

முதலாளி மனைவியுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து தொழிலாளர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் சுற்றுலா வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்த இரண்டு வாகனங்களையும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நிலமாமூடு பகுதியை சேர்ந்த சங்கீத் 28, மற்றும் அருமனையை அடுத்த ஓடவள்ளி பகுதியை சேர்ந்த மிதுன் 26 ஆகியோர் டிரைவர்களாக பணிபுரிந்து வந்தனர்.

வெகு நாட்களாக இருவரும் தங்களிடம் வேலை பார்த்து வந்ததால் தம்பதியினர் இரண்டு இளைஞர்களையும் முழுமையாக நம்பி தங்களது உறவினர்கள் போல் நினைத்து தங்களது வீட்டிற்குள் இயல்பாக வந்து செல்லும் அளவிற்கு பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர்கள் இருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதியினரிடம் தகராறில் ஈடுபட்டு வேலையை விட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் வேலையை விட்டு சென்ற சில நாட்களில் தம்பதியினரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து ஒருமுறை பார்த்ததும் அழியக்கூடிய நிலையில் வீடியோ ஒன்று வந்துள்ளது.

இதனை தம்பதியினர் ஓப்பன் செய்து பார்த்தபோது அதில் தம்பதியினர் இருவரும் தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்று விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனால் அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தத்தில் காணப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரது செல்போன் வாட்ஸ்அப்பிலும் அதே வீடியோ வந்துள்ளது.

இதையும் படியுங்க: மனைவி கர்ப்பம்.. எதிர்வீட்டு சிறுமியுடன் தவறான சகவாசம் : உயிரை பறித்த தகாத உறவு!!

இதனை கண்ட அந்த நபர் அந்த வீடியோ தனது செல்போனில் அனுப்பியது உங்களிடம் வேலை பார்த்து வந்த சங்கீத் என்று கூறி உள்ளார்.

காரணம் அந்த வீடியோ வந்த எண் அவருடைய போனில் ஏற்கனவே பதிவாகி இருந்துள்ளது. இதனை கொண்டு உறுதி செய்த அவர் தம்பதியினரிடம் கூறி உள்ளார்.

இதற்கிடையே தம்பதியினருக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தங்களிடம் உங்களுடைய அந்தரங்க வீடியோ உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பத்து லட்சம் ருபாய் தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

முதலில் பயந்த தம்பதியினர் பின்னர் தைரியத்தை வர வைத்துக்கொண்டு வெள்ளறடா காவல்நிலையத்திற்கு சென்று இது சம்பந்தமான வாட்ஸப் ஆதாரங்களை காண்பித்து புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளறடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் இருவரையும் தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.