தமிழகம்

மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் பலி; என்ன நடந்தது?

ராணிப்பேட்டையில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் உயிரிழந்த விவகாரம் சாதியப் பாகுபாடாக மாறியுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 46 வயதான இவரின் மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, காரில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில், மற்றொரு கார் மீது ராஜ்குமார் கார் மோதி உள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர்.

இதனையடுத்து, இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பு வைத்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தனது மனைவியை ராஜ்குமார் அனுமதித்து உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போது ராஜ்குமாரும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார்.

எனவே, அவரை மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறி உள்ளனர். அடுத்த சில நொடிகளில் ராஜ்குமார் சரிந்து விழுந்து உள்ளார். உடனடியாக, மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ராஜ்குமார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, இது குறித்து ராஜ்குமாரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அப்டேட் இல்லாத ஆளு அவரு .. மா.சு. சூசகம்

தொடர்ந்து, பாராஞ்சி – சோழிங்கம் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காரணம், ராஜ்குமார் தனது ஊர் பெயரைக் கூறியதும் தான் ஆக்ரோஷமாக தாக்கியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும், ராஜ்குமாரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் காரணம் என்னவென்று தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

20 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.