தமிழகம்

சுத்தியால் மனைவி மீது கொடூர தாக்குதல்.. சாலையில் சடலமாக கிடந்த கணவர்.. கோவையில் பரபரப்பு!

கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த வினோபா நகரில் வசித்து வந்தவர்கள் தாஸ் – மம்தா தம்பதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரம் அடைந்த தாஸ், பக்கத்து வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து வந்து, மனைவியின் தலையில் பலமாக தாக்கி உள்ளார்.

இதனையடுத்து, இதில் படுகாயம் இந்த மம்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மம்தாவின் கணவர் தாஸ் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், கொலையாளி குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. எனவே, தனிப்படை அமைத்து போலீசார் தாஸைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை பாலாஜி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு சடலமாக கிடந்தது, மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் தாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ’ஏன் அவர் மீது வழக்கு பதியவில்லை?’.. போலீஸ் ஆவணங்களை கிழித்தெறிந்தாரா பாமக நிர்வாகி? கோவையில் பரபரப்பு!

பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் போலீசார் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தால் தாஸ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்த முழுத் தகவலும் பிரேதப் பரிசோதனை முடிவிலே தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

19 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

20 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

21 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

21 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

22 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

22 hours ago

This website uses cookies.