ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனெக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ராசமான ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) இவருக்கு அனிதா மற்றும் சுஷ்மிதா என 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.
இதில் அனிதா மைசூர் அருகே உள்ள சிக்க மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர். அனிதா மற்றும் சுஷ்மிதாவை பாபு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் தாலி கட்டி திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பாபுவிற்கு அனிதா மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகறாரு செய்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே தகறாரு ஏற்படும் போது அனிதா உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம், அதுபோலவே தகராறு ஏற்பட்டு கடந்த மாதத்திற்கு முன்பு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மனைவி பாபு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று பாபு அனிதாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது அவர் வீட்டில் இருந்த ராகி களி கிண்டும் கோலில் (தொண்ணை) அனிதாவை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.
நேற்று மதியம் செய்த கொலை குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்த அவர் பின்னர் அதிகாலையில் அருகில் உள்ள பொது மக்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசாருக்கு பகுதியினர் தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிலிருந்து கிடந்த அனிதாவின் உடலை கைப்பற்றி அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாபுவை கைது செய்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.