கணவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்று கொன்ற மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமரேந்திர பாபு. இவரது மனைவி அருணா. இந்த நிலையில், இவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று முன்தினமும் அதேபோன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும், தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, அருணாவைக் கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டி உள்ளார். இதனால், பொறுமை இழந்த அருணா, ஆத்திரத்தில் ஒரு கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.
அதன் பிறகு, ஒரு கயிறை எடுத்து கணவரின் கழுத்தில் கட்டி உள்ளார். பின்னர், கணவரை வெளியே இழுத்துச் சென்று தரதரவென கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு கழுத்தில் கயிறு கட்டியதால் ஏற்பட்ட வலியால், அமரேந்திர பாபு துடித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அருணாவை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இதையும் படிங்க: பேசிக் கொண்டிருந்த காதலனை விரட்டிவிட்டு காதலி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. எனவே, இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள்ளாக, அமரேந்திர பாபு உயிரிழந்துள்ளார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், தற்போது, அருணா தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருணாவைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.