தமிழகம்

3 உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்.. தப்பிய கணவர்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில், ஆன்லைன் சூதாட்டைத்தில் பணத்தை இழந்த கணவர், தனது மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்: நாமக்கல் மாவட்டம், பெரியமணிலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (40). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் பின்னர், சேலம் சாலையில் இருக்கும் பதி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மனைவி மோகனப்பிரியா (33), மகள் பிரினிதி(6) மற்றும் மகன் ஒன்றரை வயதான பிரனிஷ் ஆகிய 3 பேருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அருகில் வசிப்பவர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, தூங்கும் அறையின் கீழே மோகனப்பிரியா, மகள் பிரினிதி மற்றும் மகன் பிரனிஷ் ஆகிய மூன்று பேரும் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் நகரப் போலீசார், மூன்று பேரின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!

இதன் பின்னர் நடத்திய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரேம் ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளதும், இதனால் மனமுடைந்த அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதும் தெரிய வந்துள்ளது. எனவே, பிரேம் ராஜை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

15 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

16 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

16 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

17 hours ago

This website uses cookies.