தமிழகம்

மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் சீவிவிட்டு, கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி. 39 வயதாகும் இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள பிச்சுபட்டி காலனியைச் சேர்ந்த ராமகலா (29) என்பவருக்கும், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த தம்பதிக்கு கோகுல் (11) என்ற மகனும், பவித்ரா (5) என்ற மகளும் உள்ளனர். மேலும், பாலாஜி தனது மனைவியின் சொந்த ஊரான பிச்சுபட்டி காலனியில் வசித்து வருகிறார். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனைத் தட்டிக்கேட்க ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளனர். அப்படித்தான் சம்பவம் நடந்த அன்றும், ராமகலாவின் உறவினர்கள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். அதேநேரம், வீட்டின் உள்ளே கணவன் – மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்து உள்ளனர்.

ஒருகட்டத்தில் தகராறு உச்சம் அடைந்த நிலையில், பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை சீவி உள்ளார். இதனால் ராமகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தம்பி வீட்டுக்குள் ஓடி வந்து உள்ளார். அப்போது, ராமகலா ரத்த வெள்ளத்தில் துடித்ததைக் கண்ட அவரது தம்பி, என்ன நடந்தது என அறிவதற்குள், அவரையும் கத்தியால் தாக்கிவிட்டு பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் வெள்ளத்திற்கு விஜய் காரணமா? ‘கிழவிகள் சொன்னது..’ திமுக பிரமுகர் பேச்சு!

பின்னர், வெளியில் நின்று கொண்டு இருந்த மற்ற உறவினர்களும் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, ராமகலா உயிரிழந்து கிடந்து உள்ளார். மேலும், ராமகலாவின் தம்பி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இதனிடையே, தப்பி ஓடிய பாலாஜி எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்து உள்ளார்.

தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமகலாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

13 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

14 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

14 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

15 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

15 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

16 hours ago

This website uses cookies.