தமிழகம்

மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் சீவிவிட்டு, கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி. 39 வயதாகும் இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள பிச்சுபட்டி காலனியைச் சேர்ந்த ராமகலா (29) என்பவருக்கும், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த தம்பதிக்கு கோகுல் (11) என்ற மகனும், பவித்ரா (5) என்ற மகளும் உள்ளனர். மேலும், பாலாஜி தனது மனைவியின் சொந்த ஊரான பிச்சுபட்டி காலனியில் வசித்து வருகிறார். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனைத் தட்டிக்கேட்க ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளனர். அப்படித்தான் சம்பவம் நடந்த அன்றும், ராமகலாவின் உறவினர்கள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். அதேநேரம், வீட்டின் உள்ளே கணவன் – மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்து உள்ளனர்.

ஒருகட்டத்தில் தகராறு உச்சம் அடைந்த நிலையில், பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை சீவி உள்ளார். இதனால் ராமகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தம்பி வீட்டுக்குள் ஓடி வந்து உள்ளார். அப்போது, ராமகலா ரத்த வெள்ளத்தில் துடித்ததைக் கண்ட அவரது தம்பி, என்ன நடந்தது என அறிவதற்குள், அவரையும் கத்தியால் தாக்கிவிட்டு பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் வெள்ளத்திற்கு விஜய் காரணமா? ‘கிழவிகள் சொன்னது..’ திமுக பிரமுகர் பேச்சு!

பின்னர், வெளியில் நின்று கொண்டு இருந்த மற்ற உறவினர்களும் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, ராமகலா உயிரிழந்து கிடந்து உள்ளார். மேலும், ராமகலாவின் தம்பி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இதனிடையே, தப்பி ஓடிய பாலாஜி எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்து உள்ளார்.

தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமகலாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

9 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

11 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.