காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ். இவரது மனைவி திருத்தணியைச் சேர்ந்த அனுசியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சென்னையில் பணியாற்றி வந்த போது பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், இரு குடும்பத்தாரிடம் பேசி பின்னர் இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியில் குடியேறி அவர்கள் சக்தி சாலையில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மகேஷ் பணியாற்றி வந்து உள்ளார்.
இதையும் படியுங்க: உறங்கி கொண்டிருந்த நண்பன் தலையில் ஒரே போடு.. சக நண்பர்களை ஷாக் ஆக வைத்த குற்றவாளி!
இந்நிலையில் அனுசியா திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த அவர் வீட்டைத் திறந்து பார்த்து உள்ளார்.
அப்பொழுது வீடு சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் உணவுப் பொருட்களை அதிக அளவில் வீணடித்து கிடந்தது கண்டு ஆத்திரம் அடைந்த அனுசியா, மகேசை திட்டி உள்ளார்.
இதில் கோபமடைந்தவர் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதனால் தனது கணவனை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்குமாறு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுத்தமாக வீட்டை வைத்துக் கொள்ளவில்லை என மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.