தமிழகம்

2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!

காஞ்சிபுரத்தில் காதல் கணவனை கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறது. இவர் 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து உள்ளார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

ரவி, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயந்தி உடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, சமையல் எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, தூங்கிக் கொண்டு இருந்த ரவி மீது ஊற்றி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ஜெயந்தியை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆத்திரம் தாங்காமல் இதுவரை இரண்டு முறை கணவர் ரவியைக் கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்து உள்ளது. இதன்படி, ஒருமுறை சாப்பாட்டில் விஷம் வைத்தும், மற்றொரு முறை பீரோவை தள்ளிவிட்டும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதையும் படிங்க: 120 கி.மீ வேகம்.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி.. OMR-ல் எதிர்பாரா சம்பவம்!

ஆனால், இந்த இரண்டு கொலை முயற்சியிலும் தப்பிய ரவி, இறுதியாக கொதிக்கும் சமையல் எண்ணெய் ஊற்றியதில் துடிதுடித்து, சிகிச்சையில் இருந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்து உள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜெயந்தியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

9 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

11 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

13 hours ago

This website uses cookies.