தமிழகம்

ஊராட்சி மன்றத் தலைவருடன் கள்ளத்தொடர்பு? மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவன்!

காஞ்சிபுரம் அருகே, ஊராட்சி மன்றத் தலைவருடன் தொடர்பில் இருந்ததாக மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தின் ஜெயலட்சுமி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (44) – கலையரசி (38) தம்பதி. இதில் செந்தில்குமார் டெய்லராகவும், மனைவி கலையரசி செங்கல்பட்டு அருகே வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வழக்கம்போல் நான்கு பேரும் நேற்று இரவு உறங்கச் சென்றனர். இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் தம்பதி இருந்த அறையில் தீப்பிடித்து எரிந்து உள்ளது. தொடர்ந்து கேட்ட அலறல் சத்தத்தால் விழித்த மகள்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழுதுகொண்டே அழைத்துள்ளனர்.

பின்னர் வந்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், தீக்காயங்களுடன் கிடந்த இருவரும் மீட்கப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த இருவரிடமும் மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மனைவி கலையரசிக்கும், வீராபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், குறிப்பாக, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, அங்கன்வாடி மையத்தில் இருந்து அழைத்து வரச் சென்ற போது கலையரசியும், ஊராட்சி மன்றத் தலைவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டியை படம்பிடித்த இளைஞர் கைது.. டிடிவி கண்டனம்!

பின்னர், தனது மனைவியின் செல்போனில் வாட்ஸ் அப் செயலியைச் சோதனை செய்து பார்த்ததில், அவர்கள் அடிக்கடி பேசி வருவதையும் கண்டறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று இரவு கூடுவாஞ்சேரியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று (டிச.28) அதிகாலை சுமார் 02.50 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

17 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

18 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

18 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

19 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

20 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

20 hours ago

This website uses cookies.