தமிழகம்

ஊராட்சி மன்றத் தலைவருடன் கள்ளத்தொடர்பு? மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவன்!

காஞ்சிபுரம் அருகே, ஊராட்சி மன்றத் தலைவருடன் தொடர்பில் இருந்ததாக மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தின் ஜெயலட்சுமி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (44) – கலையரசி (38) தம்பதி. இதில் செந்தில்குமார் டெய்லராகவும், மனைவி கலையரசி செங்கல்பட்டு அருகே வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வழக்கம்போல் நான்கு பேரும் நேற்று இரவு உறங்கச் சென்றனர். இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் தம்பதி இருந்த அறையில் தீப்பிடித்து எரிந்து உள்ளது. தொடர்ந்து கேட்ட அலறல் சத்தத்தால் விழித்த மகள்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழுதுகொண்டே அழைத்துள்ளனர்.

பின்னர் வந்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில், தீக்காயங்களுடன் கிடந்த இருவரும் மீட்கப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த இருவரிடமும் மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மனைவி கலையரசிக்கும், வீராபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், குறிப்பாக, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, அங்கன்வாடி மையத்தில் இருந்து அழைத்து வரச் சென்ற போது கலையரசியும், ஊராட்சி மன்றத் தலைவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டியை படம்பிடித்த இளைஞர் கைது.. டிடிவி கண்டனம்!

பின்னர், தனது மனைவியின் செல்போனில் வாட்ஸ் அப் செயலியைச் சோதனை செய்து பார்த்ததில், அவர்கள் அடிக்கடி பேசி வருவதையும் கண்டறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று இரவு கூடுவாஞ்சேரியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று (டிச.28) அதிகாலை சுமார் 02.50 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.