மறைத்து வைத்த ஆசிட்டை மனைவி மீது ஊற்றிய கணவர்… நீதிமன்ற வளாகத்தில் ஷாக் சம்பவம்.! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 2:00 pm
acid -Updatenews360
Quick Share

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது.

அருகில் இருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் சிவகுமார் தப்பிக்க முயன்ற போது வழக்கறிஞர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் அப்படி ஒப்படைக்கும் முயன்ற போது காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாகனத்தில் உள்ளே சிவகுமாரை ஏற்ற விடாமல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே ஆசிட் வீசுகிறாயா என்று தாக்கம் முற்பட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பாகியது.

கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார்.

மனைவி கவிதா உடல் முழுவதும் ஆசிட் பரவியதுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

கணவர் சிவகுமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Views: - 314

0

0