கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் ஒரு நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகாய ஜெகன்ராஜ் (37) என்பவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெகன்ராஜ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த மனைவி சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
நேற்று இரவு 10 மணிக்கு அளவில், ஜெகன்ராஜ் வீட்டில் இருந்து தீப்புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜெகன்ராஜ் சமையல் அறையில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகன்ராஜ் மதுபோதையில் வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும், ஜெகன்ராஜ் தற்கொலை செய்தாரா அல்லது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.