விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் திண்டிவனத்தில் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவரது மனைவி செல்வி (வயது 55) என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவி செல்வியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அங்கிருந்து தப்பித்துச் சென்று திண்டிவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.