விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் திண்டிவனத்தில் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவரது மனைவி செல்வி (வயது 55) என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவி செல்வியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அங்கிருந்து தப்பித்துச் சென்று திண்டிவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.