கோவை : அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் பயில மூன்று வருடங்களுக்கு முழு செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக 32வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிடும் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க. தனியாக தேர்தலை சந்தித்து, கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் கோவை மாநகராட்சி 32 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக தாமரை சின்னத்தில் புவனேஷ்வரன் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
தாம் வெற்றி பெற்றால்,மத்திய அரசின் திட்டங்களை வார்டு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்,எனவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் எனவும்,அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பிற்காக கல்லூரியில் படிக்க மூன்று ஆண்டுகளுக்கு தேவையான முழு செலவகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.