பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சித் தலைமைக்கு தேவையான பண்பும் பக்குவமும் அன்புமணிக்கு இல்லை எனவும் குறை கூறினார்.
இதையும் படியுங்க: நாடாளுமன்ற புலி வைகோதான்… எம்பி பதவி கிடைக்காததால் கூட்டணி முறிவு? துரை வைகோ கருத்து!
இது அன்புமணி ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்சியில் நிலவும் சூழல் காரணமாக தாங்க முடியாத மன உளைச்சலில் இருக்கிறேன். கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அரசியலையே விட்டுவிடலாம் எனும் அளவுக்கு மன அழுத்தத்தில் உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக நான் எப்போதும் கூறவில்லை. பா.ம.க.வில் உள்ள ஒவ்வொருவரும் தீவிர மன அழுத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர் என கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலுக்கு நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி வருகை…
ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை அம்மன் திருவிழா, காவம்மா திருவிழா ஆகியவை போன்ற அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24 ஆம் தேதி…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, முதல்வர்…
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட…
இசைஞானி அவதரித்த தினம் இசைஞானி என்று இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா இன்று தனது 82 ஆவது வயதில் அடி…
This website uses cookies.